0 comments

Friday, August 21, 2020

 

திரைப்படம் :செந்தமிழ் பாட்டு 

பாடகர் :SPB

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன ..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

பெண் : ஹஹா..அது தீண்டும் மேகமில்ல
தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என
உணர்த்திடும் மழையே..

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்

ஓஹோ..மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும்
இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

 

 

0 comments

திரைப்படம் : உன்னால் முடியும் தம்பி 

பாடகர்:SPB

0 comments

திரைப்படம் :மஞ்சப்பை 

பாடகர் :SPB

ஆகாஷ  நிலவுதான் அழகா தெரியல 
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே 
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல 
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா 


சூரியன கேளு வாங்கி நான் தருவேன் 
சந்திரன கேளு கொண்டு நான் வருவேன் 
வங்க கடலை நீ சின்ன குவாலையில் 
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன் 
சிங்கம் சிறுத்தையை ஒத்த நொடியில 
கொன்னு வர சொல்லு செஞ்சிடுவேன் 
உலகே அழிஞ்சாலும் உன்ன நான் காத்திடுவேன் 
என்னோட பெருமை என்ன உன் உருவில் 
பாத்திடுவேன் 

ஆகாஷ  நிலவுதான் அழகா தெரியல 
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே 
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல 
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா 


எப்பவுமே நீதான் என்னோட ஆவி 
பட்டம் பல வாங்கி ஆகனுமே தாமி 
உன்னை விட இங்கு சொத்து சுகம் 
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன் 
கண்ணின் மணியென உன்ன நினைச்சு நான் 
கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன் 
எதையும் எடுத்துதான் கொஞ்சிடுவேன் 
எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன் 
ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன் 

ஆகாஷ நிலவுதான் அழகா தெரியல 
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல 
உன்ன போல அழகுதான் ஒன்னுமில்லே உலகிலே 
ஒட்டுமொத்த அழகையும் கொண்ட நீ ஏன் உசுருல 
சாமி கொடுத்த வரமே நீ தானே எனக்கு ராசா